தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. மழை காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானது.
இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அருவியை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் முதல் கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கவர்கள், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. மழை காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானது.
இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அருவியை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் முதல் கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கவர்கள், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.