கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..!

தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. மழை காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானது.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அருவியை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் முதல் கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கவர்கள், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...