மருத்துவர் இல்லை, ஆனால் பதிவேட்டில் கையெழுத்து...! கோவையில் மூத்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்..! - அமைச்சர் நடவடிக்கை

முறையாக பணிக்கு வராமல் இருந்த மருத்துவர் முனுசாமி, வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அவரை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் கடந்த ஞாயிறு அன்று (31-07-2022) அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவராக டாக்டர் முனுசாமி செயல்பட்டு வந்தார். இவர், வருகை பதிவேட்டில் முறைகேடு செய்ததாக வந்த புகாரையடுத்து, விசாரணை மேற்கொண்டு மருத்துவர் முனுசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதயவியல் துறை தலைவர் டாக்டர் முனுசாமி சேலத்தில் வசித்து வருகிறார் இவர் சில நாட்கள் மட்டுமே கோவை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வருகை பதிவேட்டில் பல நாட்கள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்ததில், அவர் முறையாக பணிக்கு வராமல் இருந்ததும், வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அரசு மருத்துவர் முனுசாமி யை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

நோய்களை தீர்க்க ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை அரசு மருத்துவமனைகள் தான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பாற்றக்குறையால், மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், பதிவேட்டில் முறைகேடு செய்து, மருத்துவமனைக்கே வராமல் வந்ததாக கணக்கு காட்டி வந்த அரசு மருத்துவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...