மருத்துவர் இல்லை, ஆனால் பதிவேட்டில் கையெழுத்து...! கோவையில் மூத்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்..! - அமைச்சர் நடவடிக்கை

முறையாக பணிக்கு வராமல் இருந்த மருத்துவர் முனுசாமி, வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அவரை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் கடந்த ஞாயிறு அன்று (31-07-2022) அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவராக டாக்டர் முனுசாமி செயல்பட்டு வந்தார். இவர், வருகை பதிவேட்டில் முறைகேடு செய்ததாக வந்த புகாரையடுத்து, விசாரணை மேற்கொண்டு மருத்துவர் முனுசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதயவியல் துறை தலைவர் டாக்டர் முனுசாமி சேலத்தில் வசித்து வருகிறார் இவர் சில நாட்கள் மட்டுமே கோவை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்துள்ளார். ஆனால், வருகை பதிவேட்டில் பல நாட்கள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்ததில், அவர் முறையாக பணிக்கு வராமல் இருந்ததும், வருகை பதிவேட்டில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அரசு மருத்துவர் முனுசாமி யை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்ட்) செய்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

நோய்களை தீர்க்க ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை அரசு மருத்துவமனைகள் தான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பாற்றக்குறையால், மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், பதிவேட்டில் முறைகேடு செய்து, மருத்துவமனைக்கே வராமல் வந்ததாக கணக்கு காட்டி வந்த அரசு மருத்துவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...