ஆதாயக் கொலை, திருட்டு வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டோரை கைது செய்த சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்ட சூலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரிநாராயணன், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்ட சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் நடந்த ஆதாய கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு, கோவை மாவட்ட எஸ். பி பத்ரி நாராயணன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் நடந்த ஆதாய கொலையில் காளி (எ) காளிதாஸ்(32) என்ற குற்றவாளியை, காவல் ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் மகாராஜன் மற்றும் காவலர்கள் சந்துரு, முத்துகருப்பன், செல்லப்பாண்டி, பழனிகுமார் ஆகியோர், 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பிடித்தனர்.
அதே போல், சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் தலைமையில் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் ஆய்வு செய்த போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜெய பாண்டியம்மாள்(30) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே போல், கடந்த மூன்று நாட்களுக்கு முன் சூலூர் காவலர் திவாகர் இரவு ரோந்து காவலில் ஈடுபட்டிருந்தபோது, பட்டணம்புதூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற தேவி-28 என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் FRS செயலி மூலம் அவரை பழங்குற்றவாளி என்பதை கண்டறிந்து, உடனடியாக உதவி ஆய்வாளர் மற்றம் பெண் காவலரை வரவழைத்து அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அப்பெண் அவரது கணவருடன் சேர்ந்து சூலூர் காவல்நிலைய சரகத்தில், வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. உடனடியாக, அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு, ஆதாயக் கொலை, திருட்டு வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை சிறப்பாக செயல்பட்டு கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்ட சூலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வர்களர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரிநாராயணன் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் நடந்த ஆதாய கொலையில் காளி (எ) காளிதாஸ்(32) என்ற குற்றவாளியை, காவல் ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், தலைமை காவலர் மகாராஜன் மற்றும் காவலர்கள் சந்துரு, முத்துகருப்பன், செல்லப்பாண்டி, பழனிகுமார் ஆகியோர், 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பிடித்தனர்.
அதே போல், சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் தலைமையில் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் ஆய்வு செய்த போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜெய பாண்டியம்மாள்(30) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே போல், கடந்த மூன்று நாட்களுக்கு முன் சூலூர் காவலர் திவாகர் இரவு ரோந்து காவலில் ஈடுபட்டிருந்தபோது, பட்டணம்புதூர் பகுதியில் தனியாக நடந்து சென்ற தேவி-28 என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் FRS செயலி மூலம் அவரை பழங்குற்றவாளி என்பதை கண்டறிந்து, உடனடியாக உதவி ஆய்வாளர் மற்றம் பெண் காவலரை வரவழைத்து அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அப்பெண் அவரது கணவருடன் சேர்ந்து சூலூர் காவல்நிலைய சரகத்தில், வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. உடனடியாக, அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு, ஆதாயக் கொலை, திருட்டு வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை சிறப்பாக செயல்பட்டு கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்ட சூலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வர்களர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரிநாராயணன் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.