காணாமல் போன சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை அறிந்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, இன்று அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார்.
கோவை: தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, கோவை இரயில் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட சிறுமி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிறுமி தன்னிடம் செல்ஃபோன் வைத்திருந்ததால் அவரது மொபைல் நெட்வொர்க்கை போலீசார் ட்ராக் செய்து வந்துள்ளனர்.
அப்போது, சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்ட தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, உடனடியாக அதிகாலையில் கோவை ரயில் நிலையம் விரைந்த கோவை போலீசார், கோவை இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுமியை மீட்டனர்.
இதையடுத்து தஞ்சாவூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்றும் தஞ்சாவூர் போலீசார் வந்தவுடன் முறையாக அனுமதி பெற்று, சிறுமி ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.