தஞ்சையில் மாயமான 14 வயது சிறுமி - கோவை ரயில் நிலையத்தில் மீட்பு…!

காணாமல் போன சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை அறிந்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, இன்று அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார்.



கோவை: தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, கோவை இரயில் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட சிறுமி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிறுமி தன்னிடம் செல்ஃபோன் வைத்திருந்ததால் அவரது மொபைல் நெட்வொர்க்கை போலீசார் ட்ராக் செய்து வந்துள்ளனர்.

அப்போது, சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்ட தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, உடனடியாக அதிகாலையில் கோவை ரயில் நிலையம் விரைந்த கோவை போலீசார், கோவை இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து தஞ்சாவூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்றும் தஞ்சாவூர் போலீசார் வந்தவுடன் முறையாக அனுமதி பெற்று, சிறுமி ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...