தஞ்சையில் மாயமான 14 வயது சிறுமி - கோவை ரயில் நிலையத்தில் மீட்பு…!

காணாமல் போன சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை அறிந்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, இன்று அதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார்.



கோவை: தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, கோவை இரயில் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட சிறுமி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், சிறுமி தன்னிடம் செல்ஃபோன் வைத்திருந்ததால் அவரது மொபைல் நெட்வொர்க்கை போலீசார் ட்ராக் செய்து வந்துள்ளனர்.

அப்போது, சிறுமி கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்த தஞ்சாவூர் போலீசார், உடனடியாக கோவை மாநகர போலீசாரை தொடர்பு கொண்ட தகவல் தெரிவித்தனர், இதையடுத்து, உடனடியாக அதிகாலையில் கோவை ரயில் நிலையம் விரைந்த கோவை போலீசார், கோவை இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த சிறுமியை மீட்டனர்.

இதையடுத்து தஞ்சாவூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்றும் தஞ்சாவூர் போலீசார் வந்தவுடன் முறையாக அனுமதி பெற்று, சிறுமி ஒப்படைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...