கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், கடை உரிமையாளர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் கேடுகளை குறித்து எடுத்துரைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையாளர், அரசு விதிமுறை நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த கூடாது? அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை குறித்து விளக்கினார்.
மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.
ஆய்வின் போது, கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையாளர், அரசு விதிமுறை நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த கூடாது? அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை குறித்து விளக்கினார்.
மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.