மதுக்கடை வேண்டாம்'-திருப்பூரில் அமைய உள்ள மதுக்கடைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்: கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்..!

மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்ட நிலையில், கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து, 42-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 43-வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட கே வி ஆர் நகரில் 1257 என்ற டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபானக் கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.



எனவே, இந்த மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து இன்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அண்பகம் திருப்பதி மற்றும் 43-வது வார்டு மதிமுக கவுன்சிலர் சாந்தாமணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அவர்கள் கே.வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மறியலில் இருந்து களைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போரட்ட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...