மதுக்கடை வேண்டாம்'-திருப்பூரில் அமைய உள்ள மதுக்கடைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்: கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்..!

மதுபான கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்ட நிலையில், கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து, 42-வது வார்டு கவுன்சிலர் மற்றும் 43-வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட கே வி ஆர் நகரில் 1257 என்ற டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த மதுபானக் கடை குடியிருப்பு பகுதியில் உள்ளதாலும், கே.வி.ஆர்., நகர் பகுதி மெயின் ரோட்டில் இருப்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.



எனவே, இந்த மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூடாமல் இருந்ததை தொடர்ந்து இன்று காலை 42-வது வார்டு கவுன்சிலர் அண்பகம் திருப்பதி மற்றும் 43-வது வார்டு மதிமுக கவுன்சிலர் சாந்தாமணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அவர்கள் கே.வி.ஆர்., நகர் ரோட்டில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மறியலில் இருந்து களைந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போரட்ட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...