கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் குடியிருப்பு பகுதியில் ஆணையாளர் பிரதாப் திடீர் ஆய்வு..!

சேரன் காலனி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொடுக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறார்களா? என கேட்டறிந்ததுடன், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.2-க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனியில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதை தொடர்ந்து, அதே பகுதியில் புதிதாக அமைய உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெற்று விரைவில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, சேரன் காலனி பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொடுக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறார்களா? என கேட்டறிந்ததுடன், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், குடியிருப்பு மக்களிடமும் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...