தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயித்த நபர் ஏமாற்றியதால் விபரீத முடிவு எடுத்த துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அழைத்து அறிவுரை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்தார்.
அப்போது,ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் சோதனை பணியிலிருந்த காவல் துறையினர் சந்தேகித்து பெண்ணின் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த பந்தய சாலை போலீசார்பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். திருமணம் செய்வதாக நிச்சயத்து விட்டு செந்தில்குமார் என்பவர் தற்போது திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அதிருப்தியில் தற்கொலை முயற்சி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் பணியிலிருந்த காவல் துறையினர் பெண்ணிற்கு அறிவுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்தார்.
அப்போது,ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் சோதனை பணியிலிருந்த காவல் துறையினர் சந்தேகித்து பெண்ணின் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த பந்தய சாலை போலீசார்பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். திருமணம் செய்வதாக நிச்சயத்து விட்டு செந்தில்குமார் என்பவர் தற்போது திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அதிருப்தியில் தற்கொலை முயற்சி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் பணியிலிருந்த காவல் துறையினர் பெண்ணிற்கு அறிவுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.