கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்த பெண்..!

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயித்த நபர் ஏமாற்றியதால் விபரீத முடிவு எடுத்த துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலுடன் வந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அழைத்து அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் உடன் வந்தார்.

அப்போது,ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் சோதனை பணியிலிருந்த காவல் துறையினர் சந்தேகித்து பெண்ணின் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.



இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த பந்தய சாலை போலீசார்பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். திருமணம் செய்வதாக நிச்சயத்து விட்டு செந்தில்குமார் என்பவர் தற்போது திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அதிருப்தியில் தற்கொலை முயற்சி செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் பணியிலிருந்த காவல் துறையினர் பெண்ணிற்கு அறிவுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...