எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் 26-வது பட்டமளிப்பு விழா

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கேட்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வி.இராஜகோபாலன் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். 

இதைத்தொடர்ந்து வி.இராஜகோபாலன் சிறப்புரையாற்றுகையில், "12-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய பட்டமளிப்புவிழா இன்றளவிலும் நம்நாட்டு முறைக்கேற்ப கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய மூன்று பேர்களின் பங்கு மிகமுக்கியமானதாகும். இம்மூவரின் பங்கும் எஸ்.என்.ஆர். நிறுவனத்தில்தான் முழுமையாகவும் நிறைவாகவும் உள்ளது. 

பெற்றோர்கள்- குழந்தைகள், ஆசிரியர்கள்- மாணவர்கள் ஆகிய இரண்டு உறவுமுறைகளும் ஒரு சமூகத்தில் மிக முக்கியமாக பேணப்பட வேண்டியவைகளாகும்.  

முன்பிருந்த பற்றாக்குறையுகம், செலவிடும் யுகமாக மாறி, பின் வளமான யுகமாக வளர்ந்து, தற்போது பெரும்வளமான சூழலில் பயணிக்கிறது. இது கால ஓட்டத்தில் மனிதகுலம் அடைந்த பெருவெற்றி என்றே கருதலாம்" என்று கூறிய அவர்  இறுதியாக, "கல்வி என்பது தொடர்பயிற்சியாக இருக்கும்பட்சத்தில் கற்றல் என்பது மாணவனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றது. எனவே, மாணவர்கள் கற்றலை ஒரு தொடர் பயிற்சியாகவே பின்பற்றவேண்டும்” என்று அறிவுறுத்தினார். 

எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.விஜயகுமார், கல்விப்புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் 421 இளநிலை பட்டதாரிகளும் 132 முதுநிலை பட்டதாரிகளும் பட்டங்கள் பெற்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...