கோவையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

கடந்த ஆண்டு எல்லாம் கொரோனா பெருந் தொற்றால் ஆயிரக்கணக்கான படுக்கைகள் கொடிசியாவில் அமைக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இங்கு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2002 கடந்த பத்து நாட்களாக கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.



இதன் நிறைவு விழாவான இன்று, சுகாதாரத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர்.



விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என தெரிவித்தார். கோவை மாவட்டம் எழுத்தாளர்களை அதிகம் கொண்டது எனவும் கொங்கு தமிழும் மரியாதையை கொண்ட தமிழும் இங்கு அதிகம் உண்டு எனவும் கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதிக்கு அடைக்கலம் கொடுத்த மண் இந்த கோவை மண் என கூறிய அவர் இங்கு உள்ள சிங்காநல்லூரில் கலைஞர் இருந்துள்ளார் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தான் அணிந்திருந்த வெற்றி கழன்று விடுமோ என்று அய்யப்பட்டதாக கூறிய அவர் எங்கள் ஆட்சியில் வேட்டியை கழட்டுவதற்கு யாரும் இல்லை எங்கள் ஆட்சியில் அது நடக்காது என கூறினார். மேலும் புத்தக கண்காட்சி மாநிலம் முழுவதும் நடத்துவதற்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது என தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் கொடிசியா வளாகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஏராளமான மக்கள் கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டு மரண ஓலங்கள் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு எல்லாம் கொரோனா பெருந் தொற்றால் ஆயிரக்கணக்கான படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் இருந்தது.



ஆனால் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இங்கு நடைபெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக புத்தகம் எழுத எழுத்தாளர்கள் யாரும் முன் வரவில்லை என கூரிய அவர் எழுதிய புத்தகங்களை விற்பனை செய்ய செலவாகும் என்பதால் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தாங்களே வைத்துக் கொண்டு இருந்தனர், இதனை மாற்றும் பொருட்டு தமிழக முதல்வர் தன்னை காண வருபவர்கள் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார், அதன்படி அனைவரும் முதல்வருக்கு புத்தகத்தை கொடுத்தனர், அந்த புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் ஏற்கனவே தமிழில் வெளியாகி உள்ளது அடுத்த வாரம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த இரு நூல்களும் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் வேஷ்டி அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மேலும் இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...