பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லானது செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான தொழிலாளர்கள் சிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் தொழிலாளர்கள் யாரும் நிறுவனத்திற்க்கு வராத நிலையில் நிறுவனத்திலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சம்பவம் குறித்து.
உரிமையாளருக்கும், பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போராடி தீயை அனைத்தனர்.
இந்த தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நிறுவனம் விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பாதிப்பின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.