கோவையில் அதிகரிக்கும் கஞ்சா சாக்லேட் புழக்கம் - 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல், 15 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு...!

சமீபத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்லேட் வடிவில், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமானது. இந்த நிலையில், இரத்தினபுரி பகுதியில், கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரின் "ஆபரேசன் 2.0" என்ற பேரில் தடைசெய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க தனிப்படை அமைப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்லேட் வடிவில், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமானது. இந்த நிலையில், இரத்தினபுரி பகுதியில், கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல்

கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரத்தினபுரி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சங்கனூர் சாலை கண்ணப்ப நகர் பகுதியில், முதியவர் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டு இருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், அருகே சென்று விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் வலுக்கவே, போலீசார் அவரது இரு சக்கர வாகனம் மற்றும் அதில் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர்.



அப்போது, அந்த சாக்கு மூட்டையில் 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அவரிடம் விசாரித்தபோது எந்த பதிலும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் கோவை அறிவொளி நகரை சேர்ந்த பாலாஜி (56) என்பதும், அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் மார்க்கெட்டில் வேலை பார்த்து கொண்டே, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கும்பல்

பாலாஜிக்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொடுத்தது, கஞ்சா கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த ஸ்டைல் சுரேஷ் என்பவர் என்பதும் அம்பலமாகியுள்ளது. அந்த கும்பலில் மொத்தம் 15 பேர், ஸ்டைல் சுரேஷுக்கு கீழ் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. ஸ்டைல் சுரேஷ் கொடுக்கும் கஞ்சாவை வெவ்வேறு பகுதிகளில் விற்று அவரிடம் பணத்தை கொடுத்து வருவது தான் இவர்கள் வேலை. குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.

விசாரணையின் முடிவில், பாலாஜியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொபட் மற்றும் 20.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், பாலாஜி கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அவருடன் தொடர்புடைய கஞ்சா கும்பல் தலைவன் ஸ்டைல் சுரேஷ், கவுதம், நந்தா, மோசஸ், கருப்பு கவுதம், விக்கி வேதா, சந்தோஷ், தீபக் சமிலா, சிக்கோல் சந்தோஷ், கவாஸ்கான் உள்பட 15 பேரை பிடிக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, போலீசார் தங்களை தேடுவதை அறிந்த ஸ்டைல் சுரேஷ் உள்பட 15 கொண்ட கும்பல் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...