தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் - வால்பாறை தி.மு.க. புதிய நகர செயலாளர்

புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகர திமுகவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கவுன்சிலர் சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வால்பாறை சிங்கோனா 21 வது வார்டு, முன்னாள் கவுன்சிலர், சுதாகர் செயலாளராகவும், சி செல்லமுத்து - அவைத்தலைவர், எஸ் சரவணன் பொன்பாண்டி - ஆதிதிராவிடர் துணைச் செயலாளர், மகளிர் துணைச் செயலாளராக, சூரிய பிரபா என பல்வேறு புதிய நிர்வாகிகளை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



முன்னதாக, வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.



அதன் பின் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்று புதிய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.



நிகழ்ச்சியில், முன்னாள் நகர கழக செயலாளர் கோழிக்கடை என்.கணேசன், நகர்மன்ற துணை தலைவர் செந்தில் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் - மகுடீஸ்வரன், பாஸ்கர், அன்பரசன், காமாட்சி கணேசன், உமா மகேஸ்வரி, இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...