புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகர திமுகவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கவுன்சிலர் சுதாகருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வால்பாறை சிங்கோனா 21 வது வார்டு, முன்னாள் கவுன்சிலர், சுதாகர் செயலாளராகவும், சி செல்லமுத்து - அவைத்தலைவர், எஸ் சரவணன் பொன்பாண்டி - ஆதிதிராவிடர் துணைச் செயலாளர், மகளிர் துணைச் செயலாளராக, சூரிய பிரபா என பல்வேறு புதிய நிர்வாகிகளை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

அதன் பின் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்று புதிய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் நகர கழக செயலாளர் கோழிக்கடை என்.கணேசன், நகர்மன்ற துணை தலைவர் செந்தில் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் - மகுடீஸ்வரன், பாஸ்கர், அன்பரசன், காமாட்சி கணேசன், உமா மகேஸ்வரி, இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை சிங்கோனா 21 வது வார்டு, முன்னாள் கவுன்சிலர், சுதாகர் செயலாளராகவும், சி செல்லமுத்து - அவைத்தலைவர், எஸ் சரவணன் பொன்பாண்டி - ஆதிதிராவிடர் துணைச் செயலாளர், மகளிர் துணைச் செயலாளராக, சூரிய பிரபா என பல்வேறு புதிய நிர்வாகிகளை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுதாகருக்கு, தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, வால்பாறை நகரின் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.
அதன் பின் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்று புதிய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் நகர கழக செயலாளர் கோழிக்கடை என்.கணேசன், நகர்மன்ற துணை தலைவர் செந்தில் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் - மகுடீஸ்வரன், பாஸ்கர், அன்பரசன், காமாட்சி கணேசன், உமா மகேஸ்வரி, இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.