கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் நின்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!

கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (52), என்பவர் தனது மாருதி காரில் இன்று மாலை ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவு புகை கிளம்பி, தீ பிடித்துள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் தீ பிடிக்க துவங்கியதால் பரபரப்பு நிலவியது.



கோவை பி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (52). இவர், இன்று மாலை தனது மாருதி காரில், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. காரை நிறுத்துவதற்குள், அதிகளவு புகை கிளம்பிய நிலையில், காரில் இருந்த தாமோதரன் உடனடியாக வெளியே வந்தார்.

தொடர்ந்து, காரின் முன் பகுதியில் தீ பிடிக்க துவங்கியதால், உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால், தீ வேகமாக பரவத் துவங்கிய நிலையில், அங்கு சிறப்பு நிலை அலுவலர், ராமகிருஷ்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தனசேகரன், பிரசாத் உள்ளிட்டோர் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



காரில் புகை வந்தவுடன் காரை விட்டு தாமோதரன் உடனடியாக இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...