ஏற்றம்.. ஏற்றம்.. என கூறி ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது திமுக அரசு: திருப்பூரில் ஜி.கே.வாசன் காட்டம்..!

ஏற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு ஏமாற்றங்களை மட்டுமே மக்களுக்குத் தருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்தார்.


திருப்பூர்: ஏற்றம் தருவதாக கூறி ஏமாற்றங்களை மட்டுமே மக்களுக்கு திமுக அரசுதருகிறது என ஜி.கே.வாசன் விமர்சித்தார்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மாதாந்திர மின் கட்டண உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.



மேலும், மக்கள் மட்டும் அல்லாமல் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார். பெண்கள் இரவில் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களில் கூட நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் எந்த நல்ல திட்டத்தையும் அமல்படுத்தாமல் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற அறிவிக்கப்படாத திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடுமையான சிரமத்தைக் கொடுப்பதாக விமர்சித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...