கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை..!

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்புக்கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.


கோவை: கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் துளசி பறிக்க சென்றதாக தெரிகிறது.

அப்போது வனப்பகுதியில் மனித எலும்புகள் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து,கிராம நிர்வாக அலுவலர் பாலசந்திரனுடன் மதுக்கரை போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது உறுதியானது. இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...