போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட பாமக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பாமக கட்சியினர் கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக கட்சியினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருட்களை ஒழிப்பதற்குத் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



இதில், கண்டன மது போதைப் பொருட்கள் வேண்டாம் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மாவட்டச் செயலாளர் ராஜ், கஞ்சா குட்கா சிகரெட் போன்ற பொருட்கள் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களைக் குறி வைத்து விற்கப்படுவதாகவும், இதனை தடுப்பதற்கு தமிழக அரசின் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...