நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை:பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக, வரும் 5-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 820 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார் (45), விவேக் (35), நித்யானந்தம் (30), மேலாளர் சத்யலட்சுமி (30), மற்றும் 43-ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றனர். இடைக்காலத் தடை தேதி முடிந்து, மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 820 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார் (45), விவேக் (35), நித்யானந்தம் (30), மேலாளர் சத்யலட்சுமி (30), மற்றும் 43-ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றனர். இடைக்காலத் தடை தேதி முடிந்து, மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.