கோவை பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்? - வரும் 5-ம் தேதி விசாரணை..!

நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை:பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக, வரும் 5-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 820 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார் (45), விவேக் (35), நித்யானந்தம் (30), மேலாளர் சத்யலட்சுமி (30), மற்றும் 43-ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றனர். இடைக்காலத் தடை தேதி முடிந்து, மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...