கோவை பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்? - வரும் 5-ம் தேதி விசாரணை..!

நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை:பைன் பியூச்சர் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக, வரும் 5-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

கோவையில் செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், 820 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, அதன் பங்குதாரர்கள் செந்தில்குமார் (45), விவேக் (35), நித்யானந்தம் (30), மேலாளர் சத்யலட்சுமி (30), மற்றும் 43-ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடுவது தொடர்பாக தனியாக விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றனர். இடைக்காலத் தடை தேதி முடிந்து, மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து சொத்துக்களையும், ஆறு மாதத்திற்குள் விற்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு நகல், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...