கோவையில் தனியார் காட்டன் மில் நிர்வாக இயக்குநர் வீட்டில் 67 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, பணம் திருட்டு பரபரப்பு

கோவையில் தனியார் காட்டன் மில் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருடியவர்களை கண்டுபிடிக்க போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்த ஹரிஷ் பாபு (34).

இவர் அவினாசியில் இயங்கி வரும் தனியார் காட்டன் மில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மனைவி தற்போது சென்னையிலும், தாய், தந்தை இருவரும் கம்பனி கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஹரிஷ்பாபு தனது நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியாற்றும் இளங்கோ என்பவரை வீடு பூட்டியுள்ளதா என்பதை பார்க்க அனுப்பி உள்ளார்.

அப்போது இளங்கோ வந்து பார்த்த போது ஹரிஸ்பாபுவின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளங்கோ ஹரிஷ் பாபுவிற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஹரிஸ் பாபு வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தப்பிய மர்ம கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...