கோவையில் தனியார் காட்டன் மில் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருடியவர்களை கண்டுபிடிக்க போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்த ஹரிஷ் பாபு (34).
இவர் அவினாசியில் இயங்கி வரும் தனியார் காட்டன் மில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மனைவி தற்போது சென்னையிலும், தாய், தந்தை இருவரும் கம்பனி கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஹரிஷ்பாபு தனது நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியாற்றும் இளங்கோ என்பவரை வீடு பூட்டியுள்ளதா என்பதை பார்க்க அனுப்பி உள்ளார்.
அப்போது இளங்கோ வந்து பார்த்த போது ஹரிஸ்பாபுவின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளங்கோ ஹரிஷ் பாபுவிற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஹரிஸ் பாபு வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தப்பிய மர்ம கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இவர் அவினாசியில் இயங்கி வரும் தனியார் காட்டன் மில் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மனைவி தற்போது சென்னையிலும், தாய், தந்தை இருவரும் கம்பனி கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஹரிஷ்பாபு தனது நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியாற்றும் இளங்கோ என்பவரை வீடு பூட்டியுள்ளதா என்பதை பார்க்க அனுப்பி உள்ளார்.
அப்போது இளங்கோ வந்து பார்த்த போது ஹரிஸ்பாபுவின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளங்கோ ஹரிஷ் பாபுவிற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஹரிஸ் பாபு வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ அளவிலான வெள்ளி பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தப்பிய மர்ம கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.