இது மாநில நெடுஞ்சாலை என்றால் நம்ப முடிகிறதா..? : பயணிக்க முடியாத நிலையில் கோவை சேரன்மாநகர் - விளாங்குறிச்சி சாலை..!

மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சீரமைக்கப்படவில்லை. பேட்ச் ஒர்க் கூட செய்யப்படாததால் இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்து பயத்தில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் - பொதுமக்கள்.








கோவை: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேரன் மாநகர் முதல் விளாங்குறிச்சி வரை செல்லும் சாலையில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலை..!

ஹோப் காலேஜ் முதல் விளாங்குறிச்சி வரையிலான சாலை, அவிநாசி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சத்தி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டை சென்றடைய பெரிதும் உதவி வருகிறது. இந்த சாலை, சேரன் மாநகர் அருகே உள்ள பகுதி வரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்குப் பின் தொடர்ந்து வலது புரம் விளாங்குறிச்சி நோக்கி செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.



சேரன் மாநகர் அருகே மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சாலை நிறைவடையும் பகுதிக்குப்பின் தொடரும் சாலை, அன்னூர் உட்கோட்டை எல்லைப் பகுதிக்குள் வருகிறது.



இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால், இந்த சாலையில் பயணிக்கவே முடியாத அவல நிலையில் காட்சியளிக்கிறது.



பெரும்பாலான, மக்களுக்கு இந்த சாலை மாநில நெடுஞ்சாலை என்று கூட தெரியாத அளவுக்கு சிதிலமடைந்து, பயணிக்க தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது என்பதே நிதர்சனம்.

குமுறும் பொதுமக்கள்...!

சேரன் மாநகர் அருகே தொடங்கி சத்தி ரோடு சென்றடையும் வரை விநாயகபுரம் வழி மற்றும் விளாங்குறிச்சி வழி என இரு வழித்தடங்களில், மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை புனரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா...?

பொதுவாக மாநில நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு வேளை சீரமைத்து ஒரே வாரத்தில் அந்த சாலை சிதிலமடைந்தால், உடனடியாக சாலையில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும் என்பது தான் முறை. மாறாக, மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சீரமைக்கப்படவில்லை.



எந்த விதமான பேட்ச் ஒர்க்கும் செய்யப்படவில்லை. இதனால், இவ்வழியாக தினமும் வாகனங்களில் செல்பவர்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மரண பயத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.



தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், மழை பெய்தால் இந்த சாலையின் நிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மோசமாக உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்வோர் மற்றும் வீடு திரும்புவோர், இந்த குண்டும் குழியுமான சாலையில், மிகுந்த அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

தரமற்ற சாலைகளால் விபத்து, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பலமுறை இந்த சாலையின் அவல நிலை குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல் சமந்தப்பட்ட துறையினர் இந்த சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் வேலைகளை துவங்க வேண்டும் என்பதே எங்கள் ஒருமித்த கோரிக்கை", என்கின்றனர் பொதுமக்கள்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...