கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு தர்ணா போராட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கோவை:கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு அதிகமாகப் பத்தாயிரமும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் வழங்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்காக 25 சதவிகித பணியிடங்களைப் பதவி உயர்வுகளுடன் நிரப்ப வேண்டும், உரிமை விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து ஊதியம் பெறும் சலுகையை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக மாநில பதிவாளர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு B வகை வங்கி ஊழியர்களுக்கான ஊதிய பயன்களை வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரொக்கமாக பெரும் தொகைக்கு இரண்டு சதவிகிதம் வருமான வரி பிடித்ததை நிறுத்த வேண்டும்.

நூற்றாண்டுகள் கடந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 6 மணி வரை இந்த தர்ணா போராட்டம் ஆனது நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம்தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...