பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை:கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு அதிகமாகப் பத்தாயிரமும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் வழங்க வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்காக 25 சதவிகித பணியிடங்களைப் பதவி உயர்வுகளுடன் நிரப்ப வேண்டும், உரிமை விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து ஊதியம் பெறும் சலுகையை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக மாநில பதிவாளர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்.
திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு B வகை வங்கி ஊழியர்களுக்கான ஊதிய பயன்களை வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரொக்கமாக பெரும் தொகைக்கு இரண்டு சதவிகிதம் வருமான வரி பிடித்ததை நிறுத்த வேண்டும்.
நூற்றாண்டுகள் கடந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 6 மணி வரை இந்த தர்ணா போராட்டம் ஆனது நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம்தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு அதிகமாகப் பத்தாயிரமும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதிய திட்டமும் வழங்க வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களில் நேரடி நியமனத்திற்காக 25 சதவிகித பணியிடங்களைப் பதவி உயர்வுகளுடன் நிரப்ப வேண்டும், உரிமை விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து ஊதியம் பெறும் சலுகையை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக மாநில பதிவாளர் அலுவலகம் நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்.
திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு B வகை வங்கி ஊழியர்களுக்கான ஊதிய பயன்களை வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரொக்கமாக பெரும் தொகைக்கு இரண்டு சதவிகிதம் வருமான வரி பிடித்ததை நிறுத்த வேண்டும்.
நூற்றாண்டுகள் கடந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்புச் சலுகையாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 6 மணி வரை இந்த தர்ணா போராட்டம் ஆனது நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 5-ம்தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.