கோவையில் வழக்குரைஞர்கள் சங்கம் (பார் அசோசியேஷன்) அலுவலகத்தில் புகுந்து வழக்குரைஞர்களை தாக்கியவர் கைது..!

இதுகுறித்து, வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களை தாக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் அலுவலகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய நபரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குச் சென்ற கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53). என்பவர் திடீரென வழக்குரைஞர்கள் குறித்து அவதூறாகப் பேசி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அலுவலகத்திலிருந்து பார் அசோசியேஷன் செயலாளர் பிரதீஸ் கூட்டலிடுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது கணேசன் பிரதீஸை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த செயலாளர் கலையரசன் கணேசனிடம் கேட்ட போது அவரையும் தாக்கி தள்ளி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அங்கிருந்த வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களைத் தாக்கிய கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...