இதுகுறித்து, வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களை தாக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் அலுவலகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய நபரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குச் சென்ற கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53). என்பவர் திடீரென வழக்குரைஞர்கள் குறித்து அவதூறாகப் பேசி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அலுவலகத்திலிருந்து பார் அசோசியேஷன் செயலாளர் பிரதீஸ் கூட்டலிடுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது கணேசன் பிரதீஸை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த செயலாளர் கலையரசன் கணேசனிடம் கேட்ட போது அவரையும் தாக்கி தள்ளி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, அங்கிருந்த வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களைத் தாக்கிய கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குச் சென்ற கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53). என்பவர் திடீரென வழக்குரைஞர்கள் குறித்து அவதூறாகப் பேசி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அலுவலகத்திலிருந்து பார் அசோசியேஷன் செயலாளர் பிரதீஸ் கூட்டலிடுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது கணேசன் பிரதீஸை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த செயலாளர் கலையரசன் கணேசனிடம் கேட்ட போது அவரையும் தாக்கி தள்ளி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, அங்கிருந்த வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களைத் தாக்கிய கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.