கோவை செங்கல் சூளை விவகாரம் : பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல்..!

செங்கல் சூளைகளால் நடத்தப்பட்ட மண் கொள்ளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அறிக்கை அளிக்குமாறு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, கோவை ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, கள ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.


கோவை: கோவை செங்கல் சூளைகள் தொடர்பான வழக்கு, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது; மண் கொள்ளை, சேத மதிப்பீடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை, ஆக., 29-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோவை செங்கல் சூளைகள் தொடர்பான வழக்கு, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது; மண் கொள்ளை, சேத மதிப்பீடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை, ஆக., 29-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஐந்து கிராம ஊராட்சிப் பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வந்தன. அரசு மற்றும் பட்டா நிலங்களில், அரசின் விதிகளை மீறி, வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆதரவுடன் 50 அடி, 100 அடி என்ற அளவுக்கு மண் அள்ளப்பட்டது.

இந்த கிராமங்களின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாயினர். மண் கொள்ளை, விதிமீறல்கள், மக்கள் பாதிப்பு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், சுயமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் காரணமாக, இதே செங்கல் சூளைகள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் நடந்த பல்வேறு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. பசுமை தீர்ப்பாயத்திடம் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாய உத்தரவுகளின்படி, 197 செங்கல் சூளைகளும் மூடி 'சீல்' வைக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த செங்கல் சூளைகளால் நடத்தப்பட்ட மண் கொள்ளை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேத மதிப்பீடு குறித்து அறிக்கை அளிக்குமாறு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்படி, கோவை ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, கள ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் நேற்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. வரும் ஆக.,29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அப்போது, அபராதம் தொடர்பான அறிக்கை பற்றி விசாரிக்கப்படும் என்பதால், இவ்வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...