நகர்நல மருத்துவமனைகளில் கனிவான, தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகரில் உள்ள 32 நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் மகப்பேறு பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 32 நகர்நல மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ குழுவினருக்கு, மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.



இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகரில் உள்ள 32 நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் மகப்பேறு பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர்: கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 இடங்களில் நகர் நல மருத்துவமனைகள் செயல்பட்டுவருகிறது. தற்போது, பருவ மழை பெய்து வருவதால் ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்து மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் அரசு சேவை மனப்பான்மையுடன் வழங்கி வருகிறது. எனவே, இதன் முக்கியத்துத்தை உணர்ந்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சையை வழங்க வேண்டும்.

கடந்த 4 மாதங்களில் ராஜ வீதி மருத்துவமனையில் 43 தாய்மார்கள் பிரசவித்துள்ளனர், தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். இம்மருத்துவமனையில், தாய்மார்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று மற்ற மருத்துவமனைகளும் மகப்பேறு சேவையை ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பெறும் வகையில், மருத்துவ குழுவினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நகர்நல மருத்துமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவிகள் முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நகர் நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விரைவில் வழங்கப்படும். மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு பணியாற்றிட கேட்டுக் கொள்கிறேன், என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார். உதவி நகர் நல அலுவலர் ராம்குமார் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...