விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கோவை: கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்தனர்.
கோவையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்த போது சிறுமி 5.5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் தாய் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் சித்தப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
(கைது செய்யப்பட்டவர், சிறுமியின் இரத்த சொந்தம் என்பதால் குற்றவாளியின் பெயரை தவிர்க்கப்பட்டுள்ளது)