நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு தொடுத்து மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டு சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்கும் செயலை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

மாவட்டத் தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாடு முழுவதும் இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிந்து கொண்ட மத்திய அரசு நெருக்கடியை கொடுப்பதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மீது அமலாக்கத்துறை ஏவி வழக்குத் தொடுத்து, அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு தொடுத்து மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டு சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்கும் செயலை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.
மாவட்டத் தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாடு முழுவதும் இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிந்து கொண்ட மத்திய அரசு நெருக்கடியை கொடுப்பதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மீது அமலாக்கத்துறை ஏவி வழக்குத் தொடுத்து, அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.