கோவை பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்..!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு தொடுத்து மத்திய அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டு சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிக்கும் செயலை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.



மாவட்டத் தலைவர் பகவதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது நாடு முழுவதும் இன்று விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிந்து கொண்ட மத்திய அரசு நெருக்கடியை கொடுப்பதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மீது அமலாக்கத்துறை ஏவி வழக்குத் தொடுத்து, அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.



இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...