கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 354 கிலோ குட்கா பறிமுதல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது

கோவை கருமத்தம்பட்டி குடோனில் பதுக்கி வைத்திருந்த 354 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம், முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குட்கா பொருட்களை மொத்தமாக குடோன்களில் பதுக்கி வைத்து, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து ஆய்வாளர் ராஜதுறை, உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன், தலைமையிலான போலீஸார் வாகராயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு குடோனில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பிடித்து விசாரித்த போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் (40), ரஞ்சித்குமார் (26), சோகராம் (22), மாதராம் (30), மற்றும் தீபாராம் (27) என்பதும், குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அதை சட்டவிரோதமாக சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த சுமார் 354 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...