டவர் லைன் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி குன்னத்தூர் உட்பட்ட, ஹை ஸ்கூல் ரோடு ஆகிய பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே டவர் லைன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் உட்பட்ட, ஹை ஸ்கூல் ரோடு பகுதி ஆகிய மூன்று வார்டுகளிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றன. இதனிடையே, இக்குடியிருப்பு பகுதியின் அருகில் தனியார் நிறுவனமானது 'டவர் லைன்' அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இப்பகுதியில் அமைந்துள்ள 500-குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டும், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டும், டவர் லைன் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் உட்பட்ட, ஹை ஸ்கூல் ரோடு பகுதி ஆகிய மூன்று வார்டுகளிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றன. இதனிடையே, இக்குடியிருப்பு பகுதியின் அருகில் தனியார் நிறுவனமானது 'டவர் லைன்' அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் அமைந்துள்ள 500-குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டும், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டும், டவர் லைன் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.