கோவை பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழில் பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் மரணம்..!

இது தொடர்பாக, மனைவி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழில் பேட்டையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27-வயதான சக்திவேல். இவர் வேலை காரணமாக தனது தம்பியின் சகோதரரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சின்னாம்பாளையம் சென்றுள்ளார்.

பின் இரவு வீடு திரும்பும் போது, பொள்ளாச்சி உடுமலை ரோடு தொழிற்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.



இது தொடர்பாக, சக்திவேலின் மனைவி ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...