இலங்கை போன்ற நெருக்கடியை இந்தியாவும் சந்தித்து வருகிறது சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் குழுவின் ஆறு மாத கால சுறுக்க அறிக்கையை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கினைப்பாளருமான ஜி.ராமகிருஷ்ணன் முன்வைத்தார்.


கோவை: பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து பேசிய கே.பாலகிருஷ்ணன், மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத பணவீக்கத்தை, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டினால் உலக நாடுகள் இப்படித்தான் நெருக்கடியை சந்தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க அடுத்த நாட்டை அடையாளம் காட்டுகிறார்கள்.



பண வீக்கம் உண்மையில் 8 சதவிகிதம் என்று சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது.

இதுபோன்ற ஒரு நிலைதான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரணமாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலி பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு நெருக்கடி தான் இந்திய நாடும் சந்தித்து வருகிறது. டாலர் கையிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் வேலையின்மை 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிச்சுறுக்குகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், நிவாரணங்களைக்கூட ஒன்றிய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்துகிறது. நாட்டை காப்பாற்ற முடியுமா என்கிற ஐயம் எழுந்துள்ளது. நாடு பின்னோக்கி இழுக்கிற வேலையை பாஜக அரசு செய்கிறது.



ஆனால் அம்பானி, அதானி சொத்துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடி குறிது பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தந்த வர்த்தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சியில் பாராளுமன்றத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க முடியும். நெருக்கடியில் உழலுகிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப்பதை அறிய முடிகிறது. இதனை திசைதிருப்பத்தான் பிரிதாலும் சூழ்ச்சிகயை திட்ட மிட்டு பாஜக ஏற்படுத்துகிறது.

இதற்கான பணிகளை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதாயம் என்று பாஜக நினைக்கிறது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழியும் இயக்கங்களை வெற்றிகரமாக்கிடவும், அதில் வெகுமக்கள் திரளாக பங்கேற்கவைப்பதிலும் கட்சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

சிறப்பு பேரவையில் 38 பேர் கொண்ட கோவை மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார். மேலும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஏ.ராதிகா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், ஆர்.கோபால், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ், என்.ஆர்.முருகேசன், வி.ஆர்.பழனிச்சாமி, என்.ஆறுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...