பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 39 மையங்களில் குரூப் 4 தேர்வு - 11456 பேர் தேர்வு எழுதினர்.
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 13,643 பேர் குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள 39 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 11,456 தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களில் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 13,643 பேர் குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள 39 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 11,456 தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களில் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.