தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற்றது.
கோவை: நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநகர காவல் துணை ஆணையர் சுகாஷினி, மாவட்ட விளையட்டு அலுவலா் ரவிச்சந்திரன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சேர்மன் நவமணி, தலைவர் சுகுணா தேவி, செயலாளர் கீதா,செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் போட்டி வ.உ.சி மைதானம் வழியாக, அண்ணா சிலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை சென்று மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்த்திற்கு வந்தடைந்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.