மாவட்டத்தில் 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 77,020 பேர் தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக, 247 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், துணை ஆட்சியர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: தமிழக அரசு துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 4 தேர்வுகள் இன்று நடைபெற்று வருகிறது.மொத்தம் 22 லட்சம் பேர் தமிழகத்தில்இத்தேர்வை எழுதவுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்று வருகிறது
அதன்படி, கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில்,77,020 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இதற்காக, 247 தேர்வுக் கூட ஆய்வு அலுவலர்கள், துணை ஆட்சியர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுளளது. அனைத்து தேர்வு மையங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு தேர்வு மேற்கொள்ளப்படுகிறது.