44வது செஸ் ஓலிம்பியாட் போட்டி: திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரை சுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: சென்னையில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் , திருப்பூர் ரைடர்ஸ் கிளப் , யங் இந்தியன் திருப்பூர்நடத்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.



விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ்ட் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர், சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரைசுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில்

200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...