சமையலின் போது எதிர்பாராத விதமாக உடையில் தீ பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: சமையலின் போது தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனஜா (45). தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்கர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்து வனஜா பம்ப் ஸ்டவ் அடுப்பில் டீசல் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. வலியால் துடித்தபடி வனஜா வெளியே ஓடி வந்தார்.
வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனஜாபரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனஜா (45). தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்கர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்து வனஜா பம்ப் ஸ்டவ் அடுப்பில் டீசல் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. வலியால் துடித்தபடி வனஜா வெளியே ஓடி வந்தார்.
வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனஜாபரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.