கோவையில் சமையலின் போது தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

சமையலின் போது எதிர்பாராத விதமாக உடையில் தீ பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சமையலின் போது தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனஜா (45). தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்கர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்து வனஜா பம்ப் ஸ்டவ் அடுப்பில் டீசல் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. வலியால் துடித்தபடி வனஜா வெளியே ஓடி வந்தார்.

வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனஜாபரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...