தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு..!

தூய்மை பணிகள் மற்றும் பாலு கார்டன்‌ பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்தும், குனியமுத்தூர்‌ மாநகராட்சி பள்ளியில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று விரைவில்‌ பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



கோவை‌: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93-க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரங்கசாமி நாயுடு நகரில்‌ மழைநீர்‌ வடிகாலை தூர்வாரும்‌ பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவிட்டு, பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



குனியமுத்தார்‌ - பாலக்காடு சாலை, இடையர்பாளையம்‌ பிரிவு பகுதியில்‌ ஆய்வு செய்து, சாலையில்‌ தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டு, சாலையோரங்களில்‌ தேங்கும்‌ மழைநீரை உடனடியாக அகற்றிடவும்‌,



வார்டு எணி்‌.92க்குட்பட்ட பாலு கார்டன்‌ பகுதியில்‌ மழைநீர்‌ வடிகாலை புரனமைத்து மழைநீரை வெளியேற்ற பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, பாலு கார்டன்‌ பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்த பின்னர்‌, 



விநாயகர்‌ கோயில்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



மேலும்‌, கோவைப்புதார்‌ பிரிவு, இ.பி.காலனி பகுதியில்‌ உள்ள கால்வாயை 850 மீட்டர்‌ தூர்வாரும்‌ பணி முடிவுற்றதை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌ அப்பகுதியில்‌ 942 மீட்டர்‌ தொலைவிற்கு, ரூ.51.74 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணியை ஆய்வு செய்து பணியை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, குனியமுத்தூர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பள்ளியில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டடம்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று விரைவில்‌ பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, இளஞ்சேகரன்‌, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...