பள்ளிக்கூடங்கள் திறப்பதை விடுத்து 'மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் திமுக அரசு' கோவையில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பள்ளிக்கூடங்கள் திறப்பதை விடுத்து மதுக்கடைகளை திறக்க முனைப்பு காட்டும் திமுக அரசை கண்டித்தும், பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் மதுக்கடைகள் தேவையா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பும் விதமான பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



கோவை: பள்ளிக்கூடங்கள் திறப்பதை விடுத்து மதுக்கடைகளை திறக்க முனைப்பு காட்டும் திமுக அரசை கண்டித்து கோவையில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பல அரசு பள்ளிகளை முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்தார். ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அரசு பள்ளிகளை மூடி வருகின்றனர்.



இந்த வருடம் மட்டும் 40 அரசு பள்ளிகளை மூடியுள்ளனர்.

669-அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்தப் பள்ளிகளும் மூடப்படலாம். இதுதான் இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமையாக உள்ளது. ஆனால் தமிழக அரசோ பள்ளிகளை திறப்பது, அரசு பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மதுக்கடைகளை திறப்பதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.



இதனை கண்டித்து கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. கோவை பாமக மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாட்டையும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் மதுக்கடைகளையும் மதுக்கூடங்களை திறக்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.



மேலும், பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலையில் மதுக்கடைகள் தேவையா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பும் விதமான பதாகைகளை ஏந்தி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



தமிழக அரசு உடனடியாக இந்த போக்கை நிறுத்தி கொள்ளவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கோவையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...