புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் நகைக்கடை விற்பனையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 8-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கொண்டையன்பாளையம் செந்தூர் கார்டன் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் பிரபல தனியார் நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
வினோத்குமார் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவர் சிவானந்தாமில்ஸ் பகுதியில் உள்ள அவரது தாய் விட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வினோத்குமார் சிவானந்தா மில்ஸ் பகுதியில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து பணிக்குச் சென்ற நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே வசிக்கும் சன்மதி என்பவர் வினோத்குமாருக்கு செல்போன் மூலம் அழைத்து வீட்டின் கதவு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, வினோத்குமார் விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் உள்ள 3 செயின்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை கொண்டையன்பாளையம் செந்தூர் கார்டன் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் பிரபல தனியார் நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
வினோத்குமார் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவர் சிவானந்தாமில்ஸ் பகுதியில் உள்ள அவரது தாய் விட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வினோத்குமார் சிவானந்தா மில்ஸ் பகுதியில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து பணிக்குச் சென்ற நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே வசிக்கும் சன்மதி என்பவர் வினோத்குமாருக்கு செல்போன் மூலம் அழைத்து வீட்டின் கதவு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, வினோத்குமார் விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் உள்ள 3 செயின்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.