கோவையில் தனியார் நகை கடை விற்பனையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 8-பவுன் நகை கொள்ளை..!

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் நகைக்கடை விற்பனையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 8-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கொண்டையன்பாளையம் செந்தூர் கார்டன் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் பிரபல தனியார் நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

வினோத்குமார் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவர் சிவானந்தாமில்ஸ் பகுதியில் உள்ள அவரது தாய் விட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வினோத்குமார் சிவானந்தா மில்ஸ் பகுதியில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்து பணிக்குச் சென்ற நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே வசிக்கும் சன்மதி என்பவர் வினோத்குமாருக்கு செல்போன் மூலம் அழைத்து வீட்டின் கதவு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, வினோத்குமார் விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் உள்ள 3 செயின்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...