92.50 கோடி கிலோ பயன்படுத்த முடியாத அரிசி என எடப்பாடி பொய் சொல்வதாக அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சிகள் அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றும் பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு எதிர்க்கும் அமைச்சர் சக்கரபாணி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று மதியம் காங்கேயம் பகுதியில் அரிசி ஆலை அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பிறகு மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை அரவை ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசியை வழங்க இன்று மதியம் அரிசி ஆலை அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளோம், தமிழகத்தில் 17 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. அதை தரமான முறையில் அரைத்து தர அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.

1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கும் கடையை பிரித்து தர கோரிக்கை வைத்தனர், அதை செயல்படுத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், 165 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதை மாற்றி அதற்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, அதே போல் பழுதடைந்த கட்டிடங்களை மழைக்காலத்திற்குள் சரிசெய்ய கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக இந்திய உணவுகழக அதிகாரிகள் கூறியுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என குற்றம்சாட்டியவர், கும்பகோணத்தில் 92,500 கிலோ அரிசி அதன் மதிப்பு 33 லட்சம் ருபாய். சேதமடைந்த அரிசி 5% மேல் இருக்க கூடாது, 0.2% கூடுதலாக சேதமடைந்துள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்ப கூடாது என்பதற்கு பதிலாக மனித பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்று கூறிவிட்டார்கள். இந்த அரிசியை வழங்கிய 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் தமிழகத்தில் தற்போதேய அரிசி இருப்பு 3 லட்சத்து 23 ஆயிரத்து 584 டன் தான் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 9 லட்சம் டன் என்று கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கண்வலிக்கிழங்கிற்கு முறையான விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய ஒன்றிய அரசிடம் கூறப்பட்டுள்ளது.

அரிசிக்கு விதிக்கபட்ட ஜி.எஸ்.டி தொடர்பாக எந்த கண்டனமும் திமுக அரசு தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு எதிர்க்கும்,அதே போல் பொங்கல் தொகுப்பு தொடர்பாக அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழ்நாடு முழுக்க 2 இடங்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது. அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,46 கோடி பொருட்களும் தரமாக தான் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...