தமிழ்நாட்டில் முதன்முறையாக, கோவையில் முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம், இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தம்

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கை கால்களை இழந்த வாலிபருக்கு நவீன எடை குறைந்த கை, கால்கள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ குழுவினர் பொருத்தினர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.



கோவை: கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார்.



இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவை உடனடியாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் தேவையான அரசு மற்றும் மருத்துவ உதவிகளை சம்மந்தப்பட்ட துறை விரைந்து வழங்க உத்தரவிட்டார், இந்நிலையில் கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்த் குமார் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா முதற்கட்டமாக அவருக்கு செயற்கை கை மற்றும் கால் பொருத்திட நடவடிக்கை எடுத்தனர்.

அதனை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலசந்தர், ஆனந்த் பாபு, ஜெகன் கோகுல்ராஜ் ஆகியோர் கொண்ட குழு தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் கால்களை இலவசமாக பொருத்தினர்.

மேலும் அவருக்கு மனப்பயிற்சி உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டன.

இரண்டு கை, கால்களை இழந்தவர்க்கு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கை, கால்கள் பொறுத்தபடுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



இன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த சுபாஷ் தனக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால்களை காண்பித்து செயற்கை கைகளால் கைகுலுக்கியும், நன்றி தெரிவித்தார்.



இதனை சிறப்பாக செய்த அரசு மருத்துவமனையை சார்ந்த மருத்துவ குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...