பொதுமக்கள் குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேடுகளையும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்தும் சோதனை செய்த அவர், தூய்மை பணியாளர் மேற்கொள்ளும் தூய்மை பணியின் போது குப்பையைத் தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வின் போது மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேடுகளையும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்தும் சோதனை செய்த அவர், தூய்மை பணியாளர் மேற்கொள்ளும் தூய்மை பணியின் போது குப்பையைத் தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வின் போது மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.