இன்று 20- ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ்.
அகில இந்திய கோழிப்பண்ணையாளர்களின் நலன் கருதி வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் மரபணு மாற்றப்பட்ட உடைத்த மக்காசோளம் அல்லது மரபணு மாற்றப்படாத மக்காச்சோளம் உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து, நலிவடைந்து கொண்டிருக்கும் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற உதவி செய்யுமாறு பாரத பிரதமர் நரேந்திரமோடியை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் மக்காசோளம் உடனடியாக இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளிலிருந்து 5 லட்சம் டன் மக்காசோளம் உடனடியாக இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.