செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு உலக செஸ் கொண்டாட்டம் கோவையில் முன்னோட்டம் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் செல்பி பாயிண்ட் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் செல்ஃபி பாயிண்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.



இந்த புகைப்பட பாயிண்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை இருக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.



Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...