அவர்களிடம் இருந்து 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீசார் சமந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களிடம் இருந்த 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அவர்கள் குனியமுத்தூர் டி.ஏ.எச். காலனியை சேர்ந்த பைசல் ரகுமான் (24), என்.பி. இட்டேரியை சேர்ந்த பைசல் (28), குறிச்சி பிரிவை சேர்ந்த ரபீக் (26) ஆகியோரை என்பது தெரியவந்தது.
மேலும், 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாவர் என்பவரிடம் போதை மாத்திரைகளை பெற்று வந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் இருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களும் பயன்படுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது, போலீசார் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் அந்த நபரை தேடி வருகிறார்கள்.
இதனையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீசார் சமந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களிடம் இருந்த 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அவர்கள் குனியமுத்தூர் டி.ஏ.எச். காலனியை சேர்ந்த பைசல் ரகுமான் (24), என்.பி. இட்டேரியை சேர்ந்த பைசல் (28), குறிச்சி பிரிவை சேர்ந்த ரபீக் (26) ஆகியோரை என்பது தெரியவந்தது.
மேலும், 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாவர் என்பவரிடம் போதை மாத்திரைகளை பெற்று வந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அவரிடம் இருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களும் பயன்படுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது, போலீசார் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் அந்த நபரை தேடி வருகிறார்கள்.